​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்களுக்கு பட்டா கத்திகளை வழங்கியதாக 3 பேர் கைது

Published : Aug 10, 2024 11:31 AM

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்களுக்கு பட்டா கத்திகளை வழங்கியதாக 3 பேர் கைது

Aug 10, 2024 11:31 AM

 சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பட்டாக்கத்திகளை கொடுத்ததாக கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூன் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, பேருந்தை சுற்றி பட்டாக் கத்திகளுடன் வலம்வந்ததாக ஏற்கனவே மாநிலக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பாலாஜி, இசக்கியல், ஜனகன், குணசேகரன் ஆகியோரை கைது செய்திருந்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், லோகேஷ், திலீப், ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளார்.