​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாநகரப் பேருந்தில் 'சீட்' பிடிப்பதில் தகராறு... வடமாநில பெண் மென்பொறியாளரை தாக்கிய 2 பெண்களிடம் விசாரணை

Published : Aug 10, 2024 11:07 AM

மாநகரப் பேருந்தில் 'சீட்' பிடிப்பதில் தகராறு... வடமாநில பெண் மென்பொறியாளரை தாக்கிய 2 பெண்களிடம் விசாரணை

Aug 10, 2024 11:07 AM

சென்னை, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் தாங்கள் துண்டு போட்டு பிடித்த இருக்கையில் அமர்ந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் மென்பொறியாளரை தாக்கியதாக 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண்ணும் அவரது தாயாரும் இருக்கையில் துண்டு போட்டு சீட் பிடித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு எழுந்திருக்காததால் குழந்தையை இடித்ததாக கூறி தன்னை தாக்கி காலால் எட்டி உதைத்ததாக மேற்கு வங்க பெண் அழுதபடி போலீசாரிடம் தெரிவித்தார்.