​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது

Published : Aug 10, 2024 8:30 AM

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது

Aug 10, 2024 8:30 AM

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த போலீஸார்  கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வெண்ணிலாவிற்கு 2-வது ஆண் குழந்தை பிறந்திருந்த நிலையில் திருடப்பட்டிருந்தது.

முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்வதை சி.சி.டிவி மூலமாக கண்டுபிடித்த போலீஸார், சேலம் அருகே உள்ள காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினியை கைது செய்தனர்.

தனக்கு கருக்கலைப்பு ஆனதை மறைத்து கர்ப்பிணி போலவே நடித்து வந்த வினோதினி, மருத்துவமனைக்கு வந்திருந்த போது குழந்தையை கடத்திச் சென்றதாகவும், இந்த குழந்தை தனக்கு பிறந்தது என குடும்பத்தினரிடம் காண்பிக்க திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.