​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் வாடகை பாக்கி செலுத்தாத 171 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

Published : Aug 09, 2024 11:39 AM

சென்னையில் வாடகை பாக்கி செலுத்தாத 171 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

Aug 09, 2024 11:39 AM

சென்னை பனகல் பார்க், பாண்டிபஜார் பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு 3 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவு வாடகை பாக்கி நிலுவை வைத்திருந்த 171 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நிலுவை வைத்துள்ள வாடகை பாக்கியை செலுத்துமாறு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.