​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை... பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை

Published : Aug 09, 2024 11:34 AM

மதுரையில் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை... பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை

Aug 09, 2024 11:34 AM

காவல்துறையில் உள்ள யாரோ ஒருசிலர் செய்யும் தவறு காரணமாக, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுவதால், பொதுமக்களிடம் கண்ணியமுடன் நடந்து கொள்ளாமல் அநாகரீகமாக பேசும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் எச்சரித்துள்ளார்.

பரவை சோதனைச்சாவடி பகுதியில் பூ விவசாயிகளை அநாகரீகமான வார்த்தைகளால் பேசிய எஸ்எஸ்ஐ தவமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதனை எடுத்துக்கூறி காவல் ஆணையர் வாக்கி டாக்கி மூலமாக காவலர்களுக்கு அறிவுரை கூறினார்.