​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா போதையில் சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக இளைஞருக்கு தர்ம அடி

Published : Aug 08, 2024 8:10 PM

கஞ்சா போதையில் சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக இளைஞருக்கு தர்ம அடி

Aug 08, 2024 8:10 PM

சென்னை வியாசர்பாடியில் பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் தகாத முறையில் பேசியதாக இளைஞர் ஒருவரை பிடித்து அடித்து அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

முல்லை நகர் இடுகாடு அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுமி, அந்நபர் தம்மை தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசுவதாக கத்தி கூச்சலிட்டதை அடுத்து, பொது மக்கள் திரண்டதாகவும் அந்நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்ற அந்நபர் கஞ்சா போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.