​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரியலூர் அருகே 2015-இல் போராட்டம் வழக்கு விசாரணை: நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்

Published : Aug 08, 2024 3:28 PM

அரியலூர் அருகே 2015-இல் போராட்டம் வழக்கு விசாரணை: நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்

Aug 08, 2024 3:28 PM

அரியலூர் அருகே 2015-இல் போராட்டம் ஒன்றின் போது கலவரம் ஏற்பட்டு 9 போலீசார் காயமடைந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார்.

வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு நீதிபதி ஜவகர் ஒத்தி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக ஆகஸ்ட் இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.