​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்

Published : Aug 08, 2024 11:32 AM

அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்

Aug 08, 2024 11:32 AM

செங்கல்பட்டில் அரசுப் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்ததால் பேருந்தை ஓட்டுநர் பாதி வழியிலேயே நிறுத்தினார்.

போதிய இடமிருந்தாலும் மாணவர்கள் உள்ளே செல்லாமல் ஜன்னல்களை பிடித்து தொங்கியபடியும், படிக்கட்டில் நின்றுக் கொண்டு கால்களை சாலையில் தேய்த்தபடியும் வருவதாக பேருந்து ஓட்டுநர் குற்றம்சாட்டினார்.

சுமார் அரை மணி நேரம் வரை அங்கேயே நின்ற நிலையில், மாணவர்கள் அனைவரும் உள்ளே ஏறிய பிறகு பேருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.