​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுக்கடலில் மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீ விபத்து... படுகாயமடைந்த மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படையினர்

Published : Aug 08, 2024 8:24 AM

நடுக்கடலில் மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீ விபத்து... படுகாயமடைந்த மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படையினர்

Aug 08, 2024 8:24 AM

ஆந்திர கடற்கரையில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலில் படகில் ஏற்பட்ட தீ விபத்தால் படுகாயமடைந்த சென்னை மீனவர், கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டார்.

சென்னையில் உள்ள கடலோர காவல்படையின் கட்டுப்பாடு அறைக்கு கிடைத்த தகவலின் பேரில், சமுத்ரா பஹரெடார் கப்பலில் சென்ற  கடலோர காவல் படையினர், 30 சதவீத தீக்காயங்களுடன் வலியால் துடித்த மீனவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின், சி-430 ரக விரைவு படகு மூலம் அவரை காக்கிநாடா கடற்கரைக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.