​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்போன் பவர் பேங்க்கை தின்பண்டம் என நினைத்து கடித்த நாய்.... தீப்பற்றி எரிந்த பவர் பேங்கை மெத்தையில் போட்டுவிட்டு ஓட்டம்...

Published : Aug 08, 2024 8:03 AM

செல்போன் பவர் பேங்க்கை தின்பண்டம் என நினைத்து கடித்த நாய்.... தீப்பற்றி எரிந்த பவர் பேங்கை மெத்தையில் போட்டுவிட்டு ஓட்டம்...

Aug 08, 2024 8:03 AM


அமெரிக்காவின் டுல்சா நகரில், வீட்டில் தனியாக இருந்த வளர்ப்பு நாய் ஒன்று செல்போன் பவர் பேங்கை வாயால் கடித்து தீ விபத்து ஏற்படுத்தியது சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது.

2 வளர்ப்பு நாய்களை, அதன் உரிமையாளர் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்ற நிலையில், எங்கோ இருந்த பவர் பேங்கை வாயால் கவ்வி வந்த நாய், தனக்கான மெத்தையில் படுத்தபடி தின்பண்டத்தை மெல்வதைப்போல் பவர் பேங்கை மென்றுவந்தது.

திடீரென பவர் பேங்க் தீப்படித்ததால், அதிர்ச்சி அடைந்த நாய் அதை அப்படியே மெத்தையில் போட்டுவிட்டது. மெத்தை தீப்பற்றி, அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியதும், நாய்களுக்கான பிரத்யேக கதவு வழியாக இரு நாய்களும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.