​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீர்காழி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து செம்மண் நிறத்தில் வரும் குடிநீர்... ஆழ்துளை கிணறு அமைத்து தருமாறு கோரிக்கை

Published : Aug 07, 2024 6:11 PM

சீர்காழி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து செம்மண் நிறத்தில் வரும் குடிநீர்... ஆழ்துளை கிணறு அமைத்து தருமாறு கோரிக்கை

Aug 07, 2024 6:11 PM

சீர்காழி அருகே 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சம்பானோடை கிராமத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து செம்மண் நிறத்தில் குடிநீர் வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

அப்பகுதி முழுவதுமே நிலத்தடி நீர் செம்மண் நிறத்தில் இருப்பதால் சற்று தொலைவான பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தருமாறும், சிதிலமடைந்து காணப்படும் நீர் தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி அமைத்து தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.