​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் பெண்கள் கல்லூரிக்காக அரசுக்கு ஈ.வெ.ராமசாமி அளித்த நிலத்தை முறைகேடு செய்தது கண்டிக்கத்தக்கது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Published : Aug 07, 2024 4:19 PM

திருச்சியில் பெண்கள் கல்லூரிக்காக அரசுக்கு ஈ.வெ.ராமசாமி அளித்த நிலத்தை முறைகேடு செய்தது கண்டிக்கத்தக்கது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Aug 07, 2024 4:19 PM

திருச்சியில் அரசு பெண்கள் கல்லூரி கட்டுவதற்காக, ஈ.வெ.ராமசாமி அளித்த 20 ஏக்கர் நிலத்தை முறைகேடு செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஈ.வெ.ராமசாமி வழங்கிய நிலத்திற்கு செல்லும் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்த புகாரை போலீசார் முறையாக விசாரிக்காமல் வழக்கை முடித்துவைத்தாக மனுதாரர்கள் உதயகுமார், பிரகலாதன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக, அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய திருச்சி காவல் ஆணையருக்கு, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.