​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவி ஆசிரியர் வேலைக்குச் செல்வது பிடிக்காமல் பள்ளிப் பேருந்தின் முகப்புக் கண்ணாடியை அடித்து உடைத்த கணவர்

Published : Aug 07, 2024 2:22 PM

மனைவி ஆசிரியர் வேலைக்குச் செல்வது பிடிக்காமல் பள்ளிப் பேருந்தின் முகப்புக் கண்ணாடியை அடித்து உடைத்த கணவர்

Aug 07, 2024 2:22 PM

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அடரியில் மனைவி ஆசிரியர் வேலைக்குச் செல்வது பிடிக்காமல் பள்ளிப் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்த போதை ஆசாமியைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாலசுப்பிரமணியன் என்ற அந்த நபரின்மனைவி அருள்செல்வி, அங்குள்ள கலைமகள் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இன்று காலை பள்ளிப் பேருந்துக்காகக் காத்திருந்தவரிடம் மது போதையில் வம்பிழுத்த பாலசுப்பிரமணியன், பேருந்து வந்ததும் அருள் செல்வி ஏற முயன்றதால் ஆத்திரமடைந்து கீழே கிடந்த கட்டை ஒன்றை எடுத்து அதன் முகப்புக் கண்ணாடியை அடித்து உடைத்தார்.