​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கு... கடலூரை சேர்ந்த தனியார் நர்சரி பள்ளி தாளாளருக்கு தொடர்பு?

Published : Aug 07, 2024 1:13 PM

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கு... கடலூரை சேர்ந்த தனியார் நர்சரி பள்ளி தாளாளருக்கு தொடர்பு?

Aug 07, 2024 1:13 PM

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கில் பள்ளி தாளாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தலைமறைவாக உள்ள அவரை தேடிவருவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விபரங்களின்படி, செங்கல்பட்டு மாவட்டம் படூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் விசாரித்ததில், அவர் அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பவில்லை என்பது தெரியவந்தது.

ஆனால், வழக்கொன்றில் தன்னால் சிறை சென்ற கடலூரை சேர்ந்த தனியார் நர்சரி பள்ளியின்தாளாளர் அருண்ராஜ், தன்னை பழிவாங்கும் நோக்கில் கோவளம் கடலோர காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதாகவும், அவரே இந்த கடிதத்தையும் அனுப்பியிருக்கலாம் என சதீஷ் கூறியுள்ளனர்.

தனது பள்ளிக்கு அனுமதி வழங்க மறுத்ததாக கல்வி அதிகாரிக்கு எதிராக அருண்ராஜ் ஒட்டியதாக கூறப்படும் போஸ்டர், காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம், ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கடிதம் ஆகிய மூன்றும் ஒரே  Fontல் இருப்பதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.