​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு - சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி

Published : Aug 06, 2024 9:08 PM

குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு - சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி

Aug 06, 2024 9:08 PM

ஆங்கிலேயர்கள் கால தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு கொண்டு செல்லும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் வழக்கு தொடர்ந்தார்.

அதன் விசாரணையின்போது, சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துகளை தடுக்கக்கூடிய வகையிலேயே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், சவுக்கு சங்கரின் பேச்சுக்கு தண்டனை பெற்றுத்தரலாம், ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு எனக்கூறி வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.