​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஐ.ஐ.டிக்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா..

Published : Aug 06, 2024 8:59 PM

சென்னை ஐ.ஐ.டிக்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா..

Aug 06, 2024 8:59 PM

சென்னை ஐ.ஐ.டி.க்கு முன்னாள் மாணவரான கிருஷ்ணா சிவுகுலா 228 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

ஐ.ஐ.டியில் 1970-ம் ஆண்டு ஏரோனாடிக்ஸ் பாடப்பிரிவில் எம்.டெக் படித்த கிருஷ்ணா சிவுகுலா, இந்தோ-எம்.ஐ.எம் என்ற நிறுவனத்தை தொடங்கி ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய இரண்டு தொழிற்சாலைகளை நடத்தி வருகிறார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த தனக்கு கல்வியே அனைத்தையும் தந்ததால் கல்விக்கு அதனை திருப்பித் தருவதாக கிருஷ்ணா சிவுகுலா தெரிவித்தார்.

இந்த நிதி புதிய ஆராய்ச்சிகளுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பாகவும் செலவிடப்படும் என ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி கூறினார்.