​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி சஸ்பெண்ட்

Published : Aug 06, 2024 5:13 PM

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி சஸ்பெண்ட்

Aug 06, 2024 5:13 PM

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் தமிழரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரசு பள்ளிகளில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்ற தமிழரசன் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமற்றியதாக நர்சிங் படித்த பூங்கொடி என்பவரின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.