​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடகை கடைகளை காலி செய்யச் சொன்ன உரிமையாளர்கள்... பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாடகைதாரர்

Published : Aug 06, 2024 10:20 AM

வாடகை கடைகளை காலி செய்யச் சொன்ன உரிமையாளர்கள்... பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாடகைதாரர்

Aug 06, 2024 10:20 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே மோகன், ஹரிதாஸ் ஆகியோருக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் நான்கைந்து கடைகளை அகரகுருபாதம் என்பவர் நடத்தி வந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடைகளை காலி செய்யும்படி கட்டாயப்படுத்தி வந்த  உரிமையாளர்கள்,  நேற்று அகரகுருபாதத்தின் கடைகளில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்துள்ளனர்.

தகவலறிந்து போலீசார் அங்கு சென்ற நிலையில், அகரகுருபாதம் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

போலீசார் அவரைத் தடுத்து காப்பாற்றிய நிலையில், பெட்ரோல் பட்டு ஏற்பட்ட கண் எரிச்சல் தாங்க முடியாமல் கீழே விழுந்து கதறித் துடித்தார்.