​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தோட்டக் காவலாளியை அடித்துக் கொன்று, அவரது மகளைக் கடத்திய சம்பவம்.... பெங்களூருவில் தலைமறைவாக இருந்த இளைஞன் கைது

Published : Aug 06, 2024 6:42 AM

தோட்டக் காவலாளியை அடித்துக் கொன்று, அவரது மகளைக் கடத்திய சம்பவம்.... பெங்களூருவில் தலைமறைவாக இருந்த இளைஞன் கைது

Aug 06, 2024 6:42 AM

ஓசூர் அருகே ஜே.காருப்பள்ளி கிராமத்தில், தோட்டக் காவலாளி முனிராஜ் என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு அவரது 17 வயது மகளைக் கடத்திச் சென்றதாக வெங்கட்ராஜ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிறுமியைக் கடத்த முயன்றதாக கடந்த ஆண்டு போக்சோவில் கைதான வெங்கட்ராஜ், ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் அவரை அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. 

அவனைத் தடுக்க முயன்ற முனிராஜை கட்டை மற்றும் கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவான வெங்கட்ராஜ், பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளான்.