​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் சிறைக்கு செல்வதற்காக அடுத்தவர் காருக்கு தீ வைத்த நபர் கைது

Published : Aug 05, 2024 9:44 PM

மதுரையில் சிறைக்கு செல்வதற்காக அடுத்தவர் காருக்கு தீ வைத்த நபர் கைது

Aug 05, 2024 9:44 PM

மதுரையில், சிறைக்கு போக வேண்டும் என்பதற்காக தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கல்லால் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சி.சி.டிவி பதிவைக் கொண்டு, கீழமாசி வீதியைச் சேர்ந்த சிவக்குமாரை கைது செய்து நடத்திய விசாரணையில், சிவக்குமாருக்கு தினமும் மது வாங்கிக் கொடுத்து வந்த நண்பர் ஒருவர் வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தானும் சிறைக்குச் செல்ல இவ்வாறு செய்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.