​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரியில் கோக்கல் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு சில வீடுகள் சேதம் - முகாம்களில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

Published : Aug 04, 2024 5:40 PM

நீலகிரியில் கோக்கல் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு சில வீடுகள் சேதம் - முகாம்களில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

Aug 04, 2024 5:40 PM

நீலகிரி மாவட்டம் கூடலுரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கோக்கல் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு சில வீடுகள் சேதமடைந்தன.

கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கோக்கல் கிராம மக்கள் முகாம்களில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்ப்பட்டால் கூடலூர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியரை தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.