​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டூவீலர் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Published : Aug 03, 2024 8:33 PM



டூவீலர் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Aug 03, 2024 8:33 PM

திண்டுக்கல்- நத்தம் சாலையில் நல்லாம்பட்டி பிரிவில் கார் மோதியதில் எதிர் திசையில் பைக்கில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

ரெண்டலப்பாறைப் பகுதியை சேர்ந்த ஜோசப் தனது மனைவி அருணா, 4 வயது மகன் ரக்சன், 2 வயது மகள் ரக்ஷிதாவுடன் டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது, திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி அரசு மருத்துவர் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் அதிவேகமாக வந்துள்ளது. நல்லாம்பட்டி பிரிவில் பேரிக்கர்ட் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்தக் காரை முந்திக்கொண்டு சென்ற பைக் மீது மோதாமல் இருக்க திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்த கார், பேரிகார்ட்டில் மோதி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஜோசப் குடும்பத்தினர் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.