​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு - கால்கோள் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

Published : Aug 03, 2024 4:22 PM

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு - கால்கோள் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

Aug 03, 2024 4:22 PM

ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற உள்ள உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான கால்கோள் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து நிகழ்வுகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும், மாநாட்டுப் பணிகளை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3D வடிவில் அறுபடை வீடுகளை வடிவமைத்து முருகனை அருகிலிருந்து பார்ப்பது போல் ஏற்பாடுகளும், முருகப் பெருமானின் வரலாறு குறித்த கண்காட்சி ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது.