​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை நீதிமன்றம் விடுவித்த 21 மீனவர்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

Published : Aug 03, 2024 7:31 AM

இலங்கை நீதிமன்றம் விடுவித்த 21 மீனவர்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

Aug 03, 2024 7:31 AM

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 21 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீனவர்களை வரவேற்ற மீன்வளத்துறையினர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 15 பேரையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேரையும் தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.