​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

Published : Aug 02, 2024 2:11 PM

செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

Aug 02, 2024 2:11 PM

சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரவள்ளூரைச் சேர்ந்த ஜெயசித்ரா, அயனாவரத்தில் வசிக்கும் தனது சகோதரி வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்து மயங்கியதாகக் கூறப்படுகிறது.

சர்க்கரை அளவு அதிகமாகவும், நாடித்துடிப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் கூறிய மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.