​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மறைமலை நகர் அருகே 300 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் 8 வகையான தோட்டங்களுடன் புதிய பூங்கா

Published : Aug 02, 2024 11:11 AM

மறைமலை நகர் அருகே 300 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் 8 வகையான தோட்டங்களுடன் புதிய பூங்கா

Aug 02, 2024 11:11 AM

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூர் கிராமத்தில் அமைய உள்ள புதிய தாவரவியல் பூங்காவின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

லண்டன் கீவ் பகுதியில் உள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டன் தொழில்நுட்பப் பங்களிப்புடன், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பிரம்மாண்ட பூங்கா அமைய உள்ளது.

8 வகையான தோட்டங்களுடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்தப் பூங்காவில், தமிழ்நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட பூர்விகத் தாவர இனங்களைப் பாதுகாத்துப் பராமரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.