​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்?: நீதிபதி

Published : Aug 01, 2024 4:27 PM

தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்?: நீதிபதி

Aug 01, 2024 4:27 PM

சட்டவிரோத மதுவிற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த பாலு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் மீது 80 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்து தொடர் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபடுகிறார் என்றால் அவரை ஏன் குண்டர் சட்டத்தில் அடைக்கவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.