​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா கடத்தலை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது: இ.பி.எஸ்.

Published : Jul 28, 2024 3:41 PM

கஞ்சா கடத்தலை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது: இ.பி.எஸ்.

Jul 28, 2024 3:41 PM

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுவதாகவும், போதையால் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தந்தை மறைவுக்கு அவரது இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக விமர்சித்தார்.

கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குரல் கொடுக்கும் முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை ஏன் திறக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.