​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்ஃபோனில் பேசி வரவழைத்து காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை

Published : Jul 28, 2024 3:23 PM

செல்ஃபோனில் பேசி வரவழைத்து காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை

Jul 28, 2024 3:23 PM

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவரை வெட்டி படுகொலை செய்ததாக ரௌடி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலரான உஷாராணியின் கணவர் ஜாக்சன், சனிக்கிழமை இரவில் வந்த செல்ஃபோன் அழைப்பை அடுத்து அருகிலுள்ள தேவாலயம் அருகே சென்றுள்ளார்.

அங்கிருந்த 6 பேர் கும்பல் ஒன்று ஜாக்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்த ஜாக்சன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.