​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை சாலிகிராமத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் - உயிரிழந்தது எப்படி?

Published : Jul 27, 2024 5:58 PM

சென்னை சாலிகிராமத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் - உயிரிழந்தது எப்படி?

Jul 27, 2024 5:58 PM

சென்னை சாலிகிராமத்தில், கணவன் மனைவி இடையேயான சண்டையில், கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற கணவன் திருமுருகனை அழைக்கச்சென்ற போது குடிபோதையில் இருந்த அவர், மனைவி புஷ்பாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

கத்தி குத்தால் படுகாயம் அடைந்த புஷ்பா உடனடியாக மருத்துவமனைக்கு செல்லாமல், அருகில் இருந்த கோயிலுக்கு சென்று தன்னை கடவுள் காப்பாற்ற வேண்டும் என வழிபாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கோயிலில் மயக்கம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கணவர் திருமுருகன் சரண் அடைந்தார்.