​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்

Published : Jul 27, 2024 3:27 PM

சென்னையில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்

Jul 27, 2024 3:27 PM

சென்னை, படப்பை பகுதியை சேர்ந்த 28 வயதான உதயகுமார் என்பவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் பெற்றோரின் அனுமதியுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை அன்று மீனம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த வாகனத்தில் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்ற உதயகுமார், நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து உதயகுமாரின் இருதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.