​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ஆக.31, செப். 1ஆம் தேதி ஃபார்முலா - 4 கார் பந்தயம்... தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Published : Jul 27, 2024 3:11 PM

சென்னையில் ஆக.31, செப். 1ஆம் தேதி ஃபார்முலா - 4 கார் பந்தயம்... தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Jul 27, 2024 3:11 PM

சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலையை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள இந்த பந்தயம் இரவு போட்டியாக நடைபெற உள்ளது. தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயம் அண்ணாசாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு 42 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.