​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் பெண் ஒருவர் மீது சின்னத்திரை நடிகர் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார்

Published : Jul 26, 2024 12:53 PM

சென்னையில் பெண் ஒருவர் மீது சின்னத்திரை நடிகர் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார்

Jul 26, 2024 12:53 PM

குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை காட்டி செய்வினை செய்து விடுவேன் என பெண் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சின்னத்திரை நடிகர் சதீஷ்குமார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு கலாசேத்திரா காலனியில் உள்ள அறுபடை முருகன் கோயிலுக்கு சென்றபோது அந்த பெண் செல்ஃபி எடுக்க வேண்டும் கூறியதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும், பிறகு யார் மூலமோ தனது செல்போன் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ததாகவும் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பிளாக் செய்த நிலையில், தனது வீட்டை கண்டுபிடித்து வந்து மிரட்டுவதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.