​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உளுந்தூர்பேட்டையில் நில அளவீடு செய்ய சென்ற வி.ஏ.ஓ.வை மிரட்டியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு

Published : Jul 26, 2024 12:10 PM

உளுந்தூர்பேட்டையில் நில அளவீடு செய்ய சென்ற வி.ஏ.ஓ.வை மிரட்டியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு

Jul 26, 2024 12:10 PM

உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொதுமக்கள் செல்லும் பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகார் குறித்து ஆய்வுக்கு சென்ற தங்களை சந்தோஷ் என்பவர் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.