​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடநாடு வழக்கு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு 2 பேர் ஆஜர்....

Published : Jul 25, 2024 4:41 PM

கொடநாடு வழக்கு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு 2 பேர் ஆஜர்....

Jul 25, 2024 4:41 PM

கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 10 பேரில் கேரளாவைச் சேர்ந்த உதயன் மற்றும் தீபுவிடம் இன்று விசாராணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் வரும் 30 ஆம் தேதி ஆஜராக  மேலும் இருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.