​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை, பனையூரில் பிறந்தநாள் என்ற பெயரில் அட்டகாசம் செய்த வழக்கு... 4 பேரை கைது செய்த போலீசார்

Published : Jul 25, 2024 4:28 PM

சென்னை, பனையூரில் பிறந்தநாள் என்ற பெயரில் அட்டகாசம் செய்த வழக்கு... 4 பேரை கைது செய்த போலீசார்

Jul 25, 2024 4:28 PM

சென்னை, பனையூரில் சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கடந்த 5ஆம் தேதி எழிலரசன் என்பவர் தனது பிறந்தநாளை சாலையில் கேக் வெட்டி கொண்டாடியதோடு, டூவீலர் மற்றும் காரை அதிவேகமாக இயக்கி கத்தியை தரையில் தேய்த்தவாறு சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.

நேற்று இரவு ஆடுதொட்டி பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த எழிலரசன், அவரது நண்பர்கள் வினோத், விக்னேஷ் மற்றும் சரவணன் ஆகியோரை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரை பார்த்ததும் தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த எழிலரசனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.