​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை... வேன்ஓட்டுநரின் நற்செயல்

Published : Jul 25, 2024 10:52 AM

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை... வேன்ஓட்டுநரின் நற்செயல்

Jul 25, 2024 10:52 AM

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன்ஓட்டுநர் ஒருவர், மாரடைப்பால் உயிர் பிரியும் தருவாயிலும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்தி குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். 

சேமலையப்பன் என்பவர் நேற்று மாலை 20 குழந்தைகளை பள்ளி வேனில் அழைத்துச் சென்றார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து வேனை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்தாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்டு பள்ளிக்குழந்தைகளும், அதே வேனில் உதவியாளராக இருந்த அவரது மனைவியும் பதறித்துடித்த நிலையில், போலீசார் உதவியுடன் சேமலையப்பனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.