​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒடிஷாவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து திண்டுக்கல்லில் விற்பனை செய்த 8 பேர் கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்

Published : Jul 25, 2024 9:44 AM

ஒடிஷாவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து திண்டுக்கல்லில் விற்பனை செய்த 8 பேர் கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்

Jul 25, 2024 9:44 AM

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிஷா இளைஞர்கள் 3 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீரசிக்கம்பட்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிஷா மாநில இளைஞர்கள் மூன்று பேர், ஒடிஷாவிலிருந்து கஞ்சாவை வாங்கிச் சென்று செம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் சுற்றுவட்டாரத்தில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ரகசிய தகவலின்பேரில் சென்று அவர்களைக் கைது செய்த போலீசார், 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.