​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உண்டியல் காணிக்கையை எண்ணும் போது கைவரிசை காட்டிய ஊழியர்கள்.. திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் எடுத்த முடிவு..

Published : Jul 24, 2024 5:53 PM

உண்டியல் காணிக்கையை எண்ணும் போது கைவரிசை காட்டிய ஊழியர்கள்.. திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் எடுத்த முடிவு..

Jul 24, 2024 5:53 PM

திருத்தணி முருகன் கோயிலில்,   கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் 2 பேர்  நூதன முறையில் திருடியதாகக்  கைது செய்யப்பட்டனர்.

இதனைத்  தொடர்ந்து  கோயில் நிர்வாகம்  காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு   கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்று காலை கோயில்  வசந்த மண்டபத்தில்   உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் அருணாசலம்  மேற்பார்வையில் தொடங்கியது.

இப்பணியில்  ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட  ஆண் ஊழியர்கள்  வேட்டி, அல்லது பேன்ட் மட்டும் அணிந்து  மேலாடையின்றி   காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்