​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் கடன் தொல்லையால் தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

Published : Jul 24, 2024 9:15 AM

திருச்சியில் கடன் தொல்லையால் தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

Jul 24, 2024 9:15 AM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த காமராஜர் காலனியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கிருஷ்ணமூர்த்தி - கிர்த்திகா தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும் 14 வயதில் மகனும் இருந்தனர். அரிசி ஆலை கூலித் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவுப் பணிக்குச் சென்றுவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியபோது, மனைவியும் பிள்ளைகளும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.

கிர்த்திகா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.