​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு

Published : Jul 24, 2024 8:47 AM

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு

Jul 24, 2024 8:47 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. ராமசேஷபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்ற அந்த நபர், ராயர்பாளையத்தில் கள்ளச்சாராயம் விற்றதாகக் கைது செய்யப்பட்டார்.

மாவட்டத்திலுள்ள பல காவல் நிலையங்களில் இவர் மீது கள்ளச்சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.