​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் தகராறை தடுக்க முயன்ற கார் ஓட்டுநர் மீது பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேருக்கு வலைவீச்சு

Published : Jul 24, 2024 7:56 AM

புதுச்சேரியில் தகராறை தடுக்க முயன்ற கார் ஓட்டுநர் மீது பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேருக்கு வலைவீச்சு

Jul 24, 2024 7:56 AM

புதுச்சேரியில் வில்லியனூர் அருகே மதுபானக் கடை வாசலில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கிய நான்கு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கூடப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மதுக் கடைக்கு மது வாங்க சென்ற கார் ஓட்டுநர் சதீஷ், தமக்கு தெரிந்த அய்யப்பன் என்பவரிடம் குடிபோதையில் நான்கு பேர் தகராறு செய்ததை பார்த்து தடுத்துள்ளார்.

அப்போது உடைந்த பாட்டிலால் தாக்கப்பட்ட சதீஷுக்கு காதில் காயம் ஏற்பட்டது. வில்லியனூர் காவல் நிலையத்தில் சதீஷ் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.