​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகாசியில் காட்டு யானைகளை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் முன்னிலையில் வனத்துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதம்

Published : Jul 24, 2024 7:34 AM

சிவகாசியில் காட்டு யானைகளை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் முன்னிலையில் வனத்துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதம்

Jul 24, 2024 7:34 AM

சிவகாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தாதது தொடர்பாக சார் ஆட்சியர் முன்னிலையில், வனத்துறையினரிடம் விவசாயிகள் கேள்விகளை எழுப்பினர்.

ராஜபாளையம் முடங்கியாறு மற்றும் தேவதானம் பகுதிகளில் விவசாயப் பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்வதாக சார் ஆட்சியரிடம் கூறிய விவசாயிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை என்று கூறினர்.