​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நரி வேட்டைக்கு ஆட்டுக்கொழுப்பு தடவி நாட்டுவெடி வைத்த 2 பேர் கைது

Published : Jul 23, 2024 4:43 PM

நரி வேட்டைக்கு ஆட்டுக்கொழுப்பு தடவி நாட்டுவெடி வைத்த 2 பேர் கைது

Jul 23, 2024 4:43 PM

அரியலூர் அருகே நரி வேட்டைக்கு ஆட்டுக் கொழுப்பு தடவிவைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த 2 வளர்ப்பு நாய்கள் இறந்தன, இருவர் கைது  செய்யப்பட்டனர்.

சன்னாவூர் கிராமத்தைச்  சேர்ந்த  ஜெயபால் என்பவர் தான் வளர்த்து வந்த 3 நாய்களை வழக்கம் போல் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது புறம்போக்கு இடத்தில் நாய்கள் இருந்த போது  வெடி சத்தம் கேட்டதையடுத்து  அருகில் சென்று பார்த்த போது இரண்டு நாய்கள் வாய் கிழிந்து இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருந்த 2 பேரை அவர்  போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்..

விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் மலையப்பநகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் சுரேஷ் என்பதும் நரி வேட்டைக்காக ஆட்டுக்கொழுப்பு தடவிய நாட்டு வெடி வைத்ததும் தெரியவந்தது.