​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குறிப்பிட்ட நபர்களை வைத்து கிளாம்பாக்கத்தில் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர்

Published : Jul 23, 2024 6:45 AM

குறிப்பிட்ட நபர்களை வைத்து கிளாம்பாக்கத்தில் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர்

Jul 23, 2024 6:45 AM

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நபர்களை ஏற்பாடு செய்ய வைத்து வேண்டுமென்றே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் சில பயணிகள் மதுபோதையில் பங்கேற்றதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கரிடம், ஆடி பெளர்ணமியன்று திருவண்ணாமலை மற்றும் தென்மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.