​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் ஒரு வயது குழந்தை பலி.. பெற்றோர் கண் முன்பே குழந்தை உயிரிழந்த சோகம்

Published : Jul 22, 2024 8:14 PM

தனியார் பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் ஒரு வயது குழந்தை பலி.. பெற்றோர் கண் முன்பே குழந்தை உயிரிழந்த சோகம்

Jul 22, 2024 8:14 PM

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனத்தின் பின் சக்கரம் ஏறியதில், பெற்றோர் கண் முன்பே ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.

கொல்லாப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்- அபிநயா தம்பதியரின் மூத்த மகன் விசாகன் யுகேஜி படித்து வரும் நிலையில் அவரை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பள்ளி வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்றுள்ளது.

அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது ஒரு வயது குழந்தை வெற்றிவேல் வாகனத்தின் அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஓட்டுநரும் அதனைப் பார்க்காமல் வாகனத்தை இயக்கியதில் குழந்தை சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தது. இது குறித்த புகாரில் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்,  ஓட்டுனர் செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.