​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு.. குறைந்தழுத்த மின்கம்பியில் மின்துண்டிப்பு செய்யாதது காரணமா?

Published : Jul 22, 2024 8:08 PM

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு.. குறைந்தழுத்த மின்கம்பியில் மின்துண்டிப்பு செய்யாதது காரணமா?

Jul 22, 2024 8:08 PM

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உயர் மின்னழுத்த கம்பத்தில் பழுதுநீக்கிக் கொண்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மேட்டூர் தாலுகா வனவாசி மூலக்காடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, உயரழுத்த மின்கம்பியில் வேலை செய்ய மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அதே மின் கம்பத்தில் உயர் மின்னழுத்த கம்பியும், வீட்டு உபயோக மின்சாரம் செல்லும் கம்பியும் இருந்துள்ளன.

இந்நிலையில்,  மின்வாரிய ஊழியர்களின் அஜாக்கிரதையால் வீட்டு உபயோக மின்சாரம் செல்லும் ஒயரில் மின்சாரம் அணைக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏழுமலை மீது மின்சாரம் பாய்ந்து அவர் கம்பத்தின் மேலே இருந்து தூக்கி வீசப்பட்டதில் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.