​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருதய அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி

Published : Jul 21, 2024 8:48 PM

இருதய அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி

Jul 21, 2024 8:48 PM

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அந்த இடத்தில் லேசான வலி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு Ecg, Echo மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.