​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் ஆற்றில் கண்டெடுப்பு..

Published : Jul 21, 2024 7:13 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் ஆற்றில் கண்டெடுப்பு..

Jul 21, 2024 7:13 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய  செல்போன்களின் உதிரிபாகங்கள், திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு தடய அறிவியல் துறை சைபர் ஆய்வகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

கைதான அருள் கொடுத்த 6 செல்போன்களை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஹரிதரன், உடைத்து வெங்கத்தூர் ஆற்றில் வீசியதாக கூறப்படும் நிலையில் 2-வது நாளாக தீயணைப்புத் துறை வீரர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சில செல்போன் உதிரி பாகங்களை மீட்டனர்.

அதன்படி 3 Display-க்கள், 1 Battery, 3 motherboard-கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை வைத்து அந்த செல்போனில் எத்தனை சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, எந்தெந்த எண்ணில் இருந்தெல்லாம் அழைப்புகள் வந்துள்ளது என்ற விவரங்களை மீட்க முடிவு செய்துள்ளனர்.