​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் புதிய தகவல்கள்

Published : Jul 21, 2024 7:11 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் புதிய தகவல்கள்

Jul 21, 2024 7:11 AM

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், கொலைக்கான திட்டம் வேலூரில் உருவானது தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கால்  உயிருக்கு ஆபத்து என்று கூறி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவை கொலை திட்டத்துக்கு வழக்கறிஞர் அருள் தயார் செய்ததாக கூறப்படுகிறது. 

அப்போது, ஆற்காடு சுரேஷின் தங்க பிரஸ்லெட்டை அருளிடம் பொன்னை பாலு கொடுத்தாகவும், இதனை விற்ற பணம்  மூன்றரை லட்சம் ரூபாயை கொண்டு, ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வழகறிஞர் ஹரிஹரன் மூலம் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல கூலிப்படையை தயார் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்